Thursday, January 27, 2011

துரோகம்

நீர்தான் செய்தீரென்று

நீரே வந்து சொன்னாலும்

நம்ப முடியாத காரியத்தை

நீர்தான் செய்தீர் என்று

நிரூபனமனபோது -

உமக்காய்

வடக்கிருக்கக் காத்திருந்த

கோபெருஞ்சோழனை

நீரே

விஷம் வைத்துக்

கொல்லாமல் கொன்றதை

வரலாறு சொல்லாவிட்டாலும்

மரணப்படுக்கையில்

மனசாட்சி

மரிக்கவிடாமல் கொல்லும்போது

சொல்லி அனுப்புங்கள்

வந்து

மன்னித்துவிட்டு போகிறேன்..

No comments: