Friday, July 2, 2010

பாசம்

விடிகாலைப் பொழுதில்
ஆடை விலகி
அயர்ந்து தூங்கும்
ஐந்து வயது மகளை
சீர் செய்து
போர்வை போர்த்துகையில்
மின்னலாய் வந்துபோனது
ஒன்னாம் தேதி
பணம் அனுப்ப மட்டுமே
நினைவில் வரும்
அப்பாவின் ஞாபகம்!






Friday, June 11, 2010

நம்ம மதுரை!

Namma Madurai
என் விழுதுகள் எங்கெங்கோ வியாப்பித்து இருந்தாலும் என் வேர்கள் இருப்பது இங்கேதான்!! இங்கேதான்!!

Kumbakonam...

Tamil Nadu, March 2010

Wednesday, October 7, 2009

இது உங்களுடைய பேனாவா?

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?

வங்கியில் வரிசையில் நின்ற
எல்லோரிடமும் கேட்டாகிவிட்டது
இட வலமாய் அசைகின்றன
எல்லா தலைகளும்.


நல்ல பேனா.
நாற்பது ரூபாய் பெரும்.

ஆனால் எடுத்து போக முடியாயது.

போனவாரம் -
ஒரு சிறிய பென்சில் துண்டு
தன்னிடம் வந்ததெப்படிஎன்று
சொல்ல தெரியாத -
நாலரை வயது மகளுக்கு
நான் செய்த உபதேசங்கள்!!

இந்த பேனாவை நான்
என்னுடன்
எடுத்து செல்ல இயலாது.

மன்னியுங்கள் என்னை.
இது உங்களுடைய பேனாவா?


Tuesday, October 6, 2009

படித்ததில் பிடித்தது....

"நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, தராசும் அரிவாள்மனையுமாக ஒரு மீன் வியாபாரியோ, குடுகுடுப்பைக்காரன் அல்லது வழி தவறிய குடிகாரனோ எப்படி வர முடியாதோ அதே போலத்தான் கவிதைகளும் வர முடியாத ஒரு விதமான வாழ்வில் நாம் இருக்கிறோம்".
- வண்ணதாசன்

Monday, May 4, 2009

இயலாமை..

ப்லொக்கெரில்
எழுதிபோட்ட
இரங்கல் கவிதையோடு
காலையில் பார்த்த
சாலையோர
அநாதை பிணத்தின்
ஆன்மா சாந்தியடைந்தது.....

தாமதமான மனிதாபிமானம்...

நடுச்சாமம் சற்றே நகர்ந்த
அதிகாலைச் சாலையில்
விமானதளம் விரைகையில்
குறுக்காக கிடந்த
அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல்
வண்டியை ஓட்டுனரும்
பார்வையை நானும் திருப்பிய லாவகம்...
ஊர் வந்திறங்கி
வேலை முடித்து
வந்த ஊர் பிரசித்தமெல்லாம்
வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி
வீடு திரும்புகையில் -
காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?