Saturday, April 11, 2009

என் கவிதை என்னிடமே இருக்கட்டும்...

நீ
உனக்காக எழுதிய
உன்னுடைய கவிதையை
உன்னிடமே வைத்துக்கொள்.

என்னிடம்
நான் எனக்காக எழுதிய கவிதை
இன்னும் யாராலும் படிக்கப்படாமல்

அப்படியே
கற்போடு இருக்கிறது.

நீ
இதை படிக்க வேண்டுமென்ற
கட்டாயமில்லை.

எழுதியவன் சொல்லவந்ததை
படிப்பவன் -
தவறாகப் புரிந்துகொண்டால் கூட
கவிதை கற்பிழந்து விடுகிறது...

என் கவிதை
என்னிடமே இருக்கட்டும்...




No comments: