Friday, July 2, 2010

பாசம்

விடிகாலைப் பொழுதில்
ஆடை விலகி
அயர்ந்து தூங்கும்
ஐந்து வயது மகளை
சீர் செய்து
போர்வை போர்த்துகையில்
மின்னலாய் வந்துபோனது
ஒன்னாம் தேதி
பணம் அனுப்ப மட்டுமே
நினைவில் வரும்
அப்பாவின் ஞாபகம்!






No comments: